3 மாத காலப்பகுதிக்குள் 42 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்

கடந்த 3 மாதங்களில் 22 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

குறித்த 3 மாத காலப்பகுதிக்குள் 42 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (06) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் இதனை வௌிப்படுத்தினார்.

குற்றங்களை ஒடுக்குவதற்கு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தௌிவுபடுத்தும் வகையில் இந்த ஊடக சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *