யாழில் கோர விபத்து! கணவன் பலி மனைவி படுகாயம்

இன்று (19.08.2023) யாழ்ப்பாணம் –  ஏ9 வீதியின் செம்மணி வளைவிற்கு அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்தில்  சிக்கி ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளும், பொலிஸாரின் தண்ணீர் பவுசரும் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொக்குவில் கிழக்கை சேர்ந்த புவனேஸ்வரன் மனேஜ் (31) என்ற இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

மன்னாரை சேர்ந்த 26 வயதான மனைவி உயிராபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *