சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 22 வயதுடைய பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று (03) பிற்பகல் அவர் தங்கியிருந்த விடுதியின் அறையொன்றில் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இவர் யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவி எனவும் யாழ்ப்பாணம், கலட்டி பகுதியில் தங்கியிருந்துள்ளதாகவும், மன்னார் பகுதியில் நிரந்தரமாக வசிப்பவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காதல் முறிவு காரணமாக இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக வதந்தி பரவி வருவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.