
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் தாக்குதல்கள் மற்றும் வன்முறை அதிகரிப்பு குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் தாக்குதல்கள் மற்றும் வன்முறை அதிகரிப்பு மற்றும் அதனால் ஏற்படும் உயிர் இழப்புகள் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.
வன்முறையை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அழைப்பு விடுத்துள்ளதுடன் மேலும் பொதுமக்கள் உயிரிழப்பைத் தடுக்க அனைத்து தரப்பினரும் அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.
1967 எல்லைகளின் அடிப்படையில் அருகருகே வாழும் இரு நாடுகளின் சர்வதேச ரீதியில் ஒப்புக் கொள்ளப்பட்ட அளவுருக்களுக்கு இணங்க, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு ஆதரவளிக்க இலங்கை உறுதியாக உள்ளது.
அன்புக்குரியவர்களை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எமது அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
டெல் அவிவ் மற்றும் ரமல்லாவில் உள்ள இலங்கை தூதரகங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்களுடன் தொடர்பில் உள்ளன. இதுவரை இலங்கையர் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
