
2023, October 02
சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாளை நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என கலால்வரி திணைக்களம் தெரிவிக்கின்றது.
சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கலால்வரி திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எனவே குறித்த காலப் பகுதியில் மதுபானசாலைகளை திறத்தல் மற்றும் அது தொடர்பான சட்டவிரோத விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் தண்டனைக்குரிய குற்றமாகும்.