இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை அணி 

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு இலங்கை மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது.

அரையிறுதியில் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியை வீழ்த்தி இந்த தகுதியை பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 75 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 16.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *