3 கோடி ரூபாவுக்கும் அதிகமான ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

மன்னார் – மதவாச்சி பிரதான வீதி உயிலங்குளம் பகுதியில் வைத்து சுமார் 3 Kg 394 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் நேற்று (29) மாலை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் மன்னார் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரிய வந்துள்ளது.

மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேருந்து குறித்த போதைப்பொருள் கடத்தி செல்லப்பட்ட நிலையில் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் உயிலங்குளம் பகுதியில் வைத்து குறித்த பேருந்து விசேட அதிரடிப்படையினரால் நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது குறித்த நபர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபர் மற்றும் போதைப்பொருள் உயிலங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் 3 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியானது என தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *