நாட்டில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இரு மடங்காக அதிகரிப்பு

பொருளாதார பிரச்சினையினால் ஏற்பட்டுள்ள மனநல பிரச்சினைக்கு சிகிச்சை பெறுவதற்காக, மனநலம் பாதிப்பு தொடர்பான வைத்தியர்களை சந்திக்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக காலி, கராப்பிட்டிய போதானா வைத்தியசாலையின் விசேட மனநல வைத்திய நிபுணர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, சிகிச்சைக்காக வரும் அவ்வாறான நோயாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், பொருளாதார பிரச்சினை மற்றும் எதிர்காலம் தொடர்பான உத்தரவாதம் இன்மை போன்ற காரணங்களினாலேயே மனநல பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *