மின் கட்டண திருத்தம் தொடர்பில் விளக்கமளிப்பு!

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் மின்சார சபையிடமிருந்து கோரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 ​​மின் கட்டண திருத்தம் 06 மாதங்களுக்கு ஒரு முறையாக வருடத்திற்கு இரண்டு முறை மாத்திரமே இடம்பெறுவதாக அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்தார்.

மின்சார கட்டணத்தை திருத்துமாறு இலங்கை மின்சார சபை இந்த வருடத்தில் மூன்றாவது தடவையாக பாவனைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக நேற்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மின்சார பாவனையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், இவ்வருடம் மின் கட்டண திருத்தம் இடம்பெறாது என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *