அமைச்சு பதவி கேட்கும் மொட்டு எம்.பிக்களுக்கு ரணில் பதில்.

மக்கள் மத்தியில் பெரிய சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள மொட்டுக் கட்சி எம்.பிக்களுக்கு திரும்பவும் அமைச்சுப் பதவிகளை கொடுத்து நாட்டில் குழப்பத்தை உண்டாக்க விரும்பவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது பிரதிநிதி ஒருவரிடம் கூறியுள்ளள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில் மேலும், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானது முதல் மொட்டுக் கட்சி எம்பிக்கள் 10 பேர் அமைச்சுப் பதவிக்காக போராடி வருகின்றனர்.

அதிருப்தியில் இருக்கும் அந்த 10 பேரும் ஒரு ஆண்டை கடந்த போதிலும், அமைச்சுப் பதவிகளுக்கான போராட்டத்தை இன்னும் கைவிடவில்லை.

சென்ற வாரம் அந்த 10 பேரில் ஒருவரான நாமல் ராஜபக்ச ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதிநிதி ஒருவரைச் சந்தித்து அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கான போராட்டத்தைத் நாம் கைவிடவில்லை என நமக்கு அமைச்சுப் பதவிகள் வழங்காவிட்டால் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கமாட்டோம் என்றும் கூறியுள்ளார்.

இச் செய்தி அந்த பிரதிநிதியால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.

“மக்கள் மத்தியில் கடும் சர்ச்சைக்குள்ளாகிய அவர்களுக்கு திரும்பவும் அமைச்சுப் பதவிகளைக் தந்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த விரும்பவில்லை” என தனது பிரதிநிதியிடம் ஜனாதிபதி கூறியுள்ளார் என அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *