சமோதி சந்தீப்பணியின் மரணத்திற்கு தடுப்பூசி காரணமில்லை…!

சுகாதார அமைச்சர்

சமோதி சந்தீப்பணியின் மரணத்திற்கு அவருக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி காரணமில்லை என,ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்பேராதனை போதனா வைத்தியசாலையில் மரணித்த சமோதி சந்தீப்பனியின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்த விசேட வைத்தியர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.இந்த குழு இன்று சனிக்கிழமை (15) பேராதனை போதனா வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.எவ்வாறாயினும், போதனா வைத்தியசாலையில் மரணித்த குறித்த யுவதிக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி,மரணத்தை ஏற்படுத்தவில்லையென ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார் .இந்த மரணம் தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணையின் ஊடாக அதனை உறுதிப்படுத்த முடியும் என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *