
லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் தனது உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
இன்று (செப். 04) நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு அமுலுக்கு வருவதாக லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
திருத்தப்பட்ட எரிவாயு விலைகள் பின்வருமாறு:
12.5 கிலோ எரிவாயு சிலிண்டர்:
உயர்த்தப்பட்டது – ரூ.145
புதிய விலை – ரூ. 3,127
5 கிலோ எரிவாயு சிலிண்டர்:
உயர்த்தப்பட்டது – ரூ. 58
புதிய விலை – ரூ.1,256
2.3 கிலோ எரிவாயு சிலிண்டர்:
உயர்த்தப்பட்டது – ரூ. 26
புதிய விலை – ரூ. 587
