அஸ்வெசும பயனாளர்கள் நாளை(29) அல்லது நாளை மறுதினம்(30) முதல் வங்கிகள் ஊடாக தமது பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக 8 இலட்சம் பயனாளிகளுக்கு ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவு இன்று(28) வங்கிகளில் வைப்பிலிடப்படுகின்றது.
மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.