இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் இருவருக்குக் கோவிட் தொற்று

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் இருவருக்குக் கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத் தொடர் எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்தத் தொடருக்கான இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த குசல் பெரேரா மற்றும் அவிஸ்க பெர்னாண்டோ ஆகிய இரண்டு வீரர்களுக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஏனைய வீரர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும், கோவிட் தொற்று விடயத்தில் சர்வதேச கிரிக்கெட் சபை தற்போது தளர்வான விதிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றபடியினால் இந்தத் தொற்று நிலைமை தொடரில் பெரிதான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படவில்லை.

ஆனால், இலங்கை அணியின் வெற்றிக்கு இது பெரும் சவாலை வழங்கலாம் என்று கருதப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *