சற்று முன் குளிர் சாதனப் பெட்டி வெடித்து,

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழப்பு…!

குளிர் சாதனப் பெட்டி வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தானின் லாகூர் நகரிலுள்ள நூர் மெகல்லாவில் உள்ள வீடொன்றிலேயே இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.இவ்விபத்தினையடுத்து அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் மிகுந்த போராட்டத்துக்கு மத்தியில் தீயினை அணைத்துள்ளனர்.எனினும் வீட்டில் இருந்த 7 மாத குழந்தை, 5 சிறுவர்கள் உட்பட 10 பேரையும் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.இந்நிலையில் பொலிஸாரின் விசாரணையில் குறித்த வீட்டில் திடீரென ஏற்பட்ட மின்கசிவினாலேயே குளிர்சாதனப் பெட்டி வெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இச்துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *